வவுனியாவில் காலையில் பெருமளவிலான மக்கள் வாக்குப்பதிவு!!

382

வாக்குப்பதிவு

2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (16.11) காலை 7.00 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்க பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் வவுனியாவில் வாக்களிப்பு சாவடிகளில் காலை 7.00 மணி தொடக்கம் 8.00 மணி வரையிலான காலப்பகுதியில் மாத்திரம் அதிகளவான மக்கள் தங்களது வாக்குப்பதிவினை மேற்கொண்டிருந்தனர்.

குறிப்பாக நெளுக்குளம், இராசேந்திரகுளம், பண்டாரிகுளம், கூமாங்குளம் மற்றும் வவுனியா நகரிலுள்ள வாக்குச்சாவடிகளில் காலையில் மக்கள் அதிகளவில் வாக்களிப்பதினை அவதானிக்க முடிந்தது.

அத்துடன் பொலிஸார் வாகனங்களில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.