வவுனியாவில் வீதியில் விசப்பட்டு கிடந்த பிரச்சார அட்டைகள் : சுத்தம் செய்த பொலிஸார்!!

295

பிரச்சார அட்டைகள்

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு (வாக்கு சாவடி அமைந்துள்ள பாடசாலை) அருகே வீதியில் விசப்பட்டு கிடந்த தேர்தல் பிரச்சார அட்டைகளை பொலிஸார் சுத்தம் செய்தனர்.

குறித்த வாக்கு சாவடிக்கு அருகே வீதியில் பிரதான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் பிரச்சார அட்டைகள் (வாக்களிப்பு தொடர்பான) வீசப்பட்டு கிடந்தன.

இதனையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து வீதியில் விசப்பட்டு கிடந்த பிரச்சார அட்டைகளை எடுத்துச் சென்றனர்.