வவுனியாவில் மதியம் 12.00 மணிவரை 50 வீதமான வாக்குப்பதிவு!!

310

வாக்குப்பதிவு

வன்னி தேர்தல் தொகுதியில் வவுனியா மாவட்டத்தில் இன்று (16.11.2019) காலை 7.00 மணி தொடக்கம் 12.00 மணிவரையிலான காலப்பகுதியில் 50வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.

காலை 9.00 மணியளவில் 23வீதமான வாக்குப்பதிவும் , காலை 11.00 மணியளவில் 47வீதமான வாக்குப்பதிவும் மதியம் 12.00 மணியளவில் 50வீதமான வாக்கு பதிவும் வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளதாகவும்,

அத்துடன் இதுவரை எவ்வித தேர்தல் வ ன்முறைகளும் வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவில்லையென அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் தேர்தல் கடமைக்காக 2155 பா துகாப்புப் பிரிவினரும் 1728 அரச ஊழியர்களும் கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.