வவுனியாவில் தேர்தல் வாக்களிப்பு நேரம் குறித்து குழப்பத்தில் மக்கள்!!

309

வாக்களிப்பு நேரம்

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெற்றுவருகின்றது.

வாக்காளர்கள் இன்று (16.11.2019) காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணிவரை வாக்களிக்க முடியுமென தேர்தல் திணைக்களத்தினால் தெரிவித்திருந்த போதிலும் வவுனியாவில் பிற்பகல் 4.00 மணியென அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் அமைந்துள்ள பெரும்பாலான வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு நேரம் முற்பகல் 7.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை என அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வாக்களிப்பு நேரம் குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபாவிடம் வினவிய போது,

இவ்விடயம் தொடர்பில் தான் கவனம் செலுத்துவதாகவும் வாக்காளர்கள் மாலை 5.00 மணிவரை வாக்களிக்க முடியுமென தெரிவித்தார்.