வவுனியாவில் ப லத்த பா துகாப்புடன் மாவட்ட செயலகத்திற்கு வாக்குப் பெட்டிகள்!!

298


வாக்குப் பெட்டிகள்



வவுனியாவில் 142 வாக்களிப்பு நிலையங்களில் இன்று (16.11.2019) காலை 7.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை இடம்பெற்ற வாக்களிப்பின் பின் வாக்குப் பெட்டிகள் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு மாலை 6.00 மணி தொடக்கம் எடுத்து வரப்பட்டுக்கொண்டிருக்கின்றன.



வவுனியா மாவட்ட செயலகத்தின் பா துகாப்பு ப லப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஏ9 வீதி மாவட்ட செயலகத்திலிருந்து சுற்றுவட்டம் (வைத்தியசாலை முன்பாகவுள்ள) வரையான வீதியும் மூ டப்பட்டுள்ளது.




மாவட்ட செயலகத்தில் தற்போது நூறுக்கு மேற்பட்ட பொ லிஸார் பா துகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதுடன் தபால் மூல வாக்கு எண்ணும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.