வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மீண்டும் ஆரம்பம்!!

387

இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி

வவுனியாவில் கடந்த 2019.11.13ம் திகதி அன்று டெங்கு அ பாயம் காரணமாக மூடப்பட்ட வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி எதிர்வரும் 18ம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

பாடசாலை வளாகத்தில் டெங்கு அ பாய நிலை காணப்படுவதனால் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மூடப்படுவதாக வவுனியா தெற்கு வலயகல்விப் பணிப்பாளர் முத்து இராதகிருஸ்ணன் தெரிவித்திருந்தார்.

குறித்த பாடசாலையில் சுகாதார பரிசோகத்தர்கள் மேற்கொண்ட சோ தனை நடவடிக்கையின் போது டெங்கு நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனையடுத்து உ டனடியாக பாடசாலையை சுத்தம் செய்யுமாறு சுகாதார பணிமனையினரால் குறித்த பாடசாலைக்கு கடிதம் அனுப்பப்பட்டு நேற்றைய தினம் பாடசாலை வளாகம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் அருகில் அமைந்துள்ள பாடசாலையின் விடுதி வளாகத்தில் உள்ள அனைத்து இடங்களும் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை யினால் பாடசாலையை மீண்டும் திறப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் எதிர்வரும் திங்கட்கிழமை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாடசாலைக்கு வருகைதருமாறு கல்லூரியின் அதிபர் அறிவித்துள்ளார்.