வன்னி மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள் : சஜித் பிரேமதாச முன்னிலை!!

405

வன்னி மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது வவுனியா, மன்னார், முல்லைத்தீவை உள்ளடக்கிய வன்னி மாவட்ட இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் வெளியான முடிவுகளின்படி சஜித் பிரேமதாச 174739 வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

வெளியான முடிவுகளின்படி வன்னி தேர்தல் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 174739 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷ 26105 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்டபாளர் அனுரகுமார திஸாநாயக்க 1156 வாக்குகளையும், எம்.கே.சிவாஜிலிங்கம் 1695 வாக்குகளையும், எம்.எச்.எம்.ஹிஸ்புல்லா 457 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இதுவரை (காலை 8.15 மணி) வெளியான முடிவுகளின்படி சஜித் பிரேமதாச 955,998 (49.71%) வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். கோத்தபாய ராஜபக்ச 833,091(43.32%) வாக்குகளையும், அநுரகுமார திஸாநாயக்க 62029(3.23%) வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.