வவுனியாவில் கோத்தபாயவின் வெற்றியை பால்சோறு வழங்கி கொண்டாடிய ஆதரவாளர்கள்!!

383

கோத்தபாயவின் வெற்றி..

புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் வெற்றிக் கொண்டாட்டம் பால்சோறு வழங்கி வவுனியாவில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வானது முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தர்மபால செனவிரட்ன தலைமையில் நடைபெற்றது.

வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சியின் தலைமை காரியாலயத்திற்கு முன்பாக மக்களுக்கு பால்சோறு வழங்கி, பட்டாசு கொழுத்தி புதிய ஜனாதிபதியின் வெற்றி கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக மக்கள் சந்திப்பொன்றும் பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நடைபெற்றது.