வீட்டில் திருமண பந்தல் அகற்றப்பட்டு அங்கு வைக்கப்பட்ட புதுமாப்பிள்ளையின் ச டலம்!!

298


புதுமாப்பிள்ளை



தேனிலவுக்கு சென்ற இடத்தில் உ யிரிழந்த புதுமாப்பிள்ளையின் உடல் சென்னைக்கு விமானத்தில் வந்தடைந்தது.



சென்னை அமைந்தகரை சேர்ந்தவர்கள் அரவிந்த்-ப்ரீத்தி தம்பதி. இவர்களுக்குச் சமீபத்தில் திருமணம் நடந்தது. இதையடுத்து தேனிலவு செல்ல திட்டமிட்டு ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள குலுமணாலிக்கு சென்றிருந்தனர்.




அங்கு இருவரும் வானில் பாராகிளைடிங் சாகசம் செல்ல திட்டமிட்டனர். அதன்படி, முதலில் ப்ரீத்தி பாரா கிளைடரில் ஏறி, வானில் பறந்து இறங்கினார். அதைத் தொடர்ந்து அரவிந்த் வானில் பறக்க பாரா கிளைடரில் ஏறி வானில் பறந்தார்.


இந்த முறையில் பாரா கிளைடிங்கில் பாரா கிளைடர் பைலெட் ஒருவருடன் நாம் ஏறிப் பறக்கலாம். இதற்குக் கட்டணமாக ரூ. ஆயிரத்து 500லிருந்து ரூ. 6 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது.

வானில் பறக்கத் தொடங்கிய சில வினாடிகளில், பாரா கிளைடரிலிருந்த அரவிந்த் கீழே வி ழுந்தார். இந்த சம்பவம் ப்ரீத்தி கண்முன்னே, அரங்கேறியது. கீழே விழுந்த அரவிந்த் சம்பவ இடத்திலே ப ரிதாபமாக உ யிரிழந்தார், அவரது உ டலை பார்த்து மனைவி ப்ரீத்தி க தறி அ ழுதார்.


இதில் விமானி ஹரி ராமுக்கும் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் திருமணத்திற்காக, அரவிந்த் வீட்டின் முன் அமைக்கப்பட்டிருந்த பந்தல், நேற்று தான் அகற்றப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் அவரின் உ டல் பி ரேத பரிசோதனை முடிந்து விமானம் மூலம் நேற்று நள்ளிரவு சென்னை கொண்டு வரப்பட்டு வீட்டில் வைக்கப்பட்டது.

உறவினர்கள், நண்பர்கள் சூழ திருமண வீடாக காட்சியளித்த அரவிந்த் வீடு தற்போது அ ழுகை ஓ லமாக காட்சிளிப்பது அந்த பகுதி மக்களின் மனதை உ லுக்கியுள்ளது.

இது குறித்து பேசிய அரவிந்த் பெற்றோர், எவ்வளவு செல்லமாக நாங்கள் அரவிந்தை வளர்த்தோம், அவ்வளவு ஆசையுடன் ஆரம்பரமாக திருமணம் செய்து வைத்தோம். ஆனால் அவன் திருமண வாழ்க்கை 8 நாளில் முடிந்துவிட்டது. தேனிலவுக்கு மகிழ்ச்சியாக சென்ற அரவிந்த் தற்போது பி ணமாக வீட்டுக்கு வந்துள்ளான் என கண்ணீருடன் கூறியுள்ளனர்.