ஒருவர் கைது
வவுனியா, அட்டமஸ்கட பகுதியில் நேற்று இரவு 46 கிலோ கிராம் மரை இறைச்சியுடன் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வோகஸ்வெவ பகுதியில் இருந்து வவுனியா நகரிலுள்ள உணவகம் ஒன்றிற்கு பட்டா வாகனத்தில் நேற்று இரவு மரை இறைச்சி 46 கிலோ கிராம் ஏற்றி செல்லப்பட்டுள்ளது.
இதன்போது பட்டாரக சாரதியான நந்திமித்திரகம பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் ஒருவரைக் அட்டமஸ்கட பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட மரை இறைச்சியுடன் பட்டாரக சாரதியும் விசாரணைகளுக்காக மாமடு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றத்தில் குறித்த சாரதியை முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.