வவுனியா பூந்தோட்டம் பிரதேச முன்பள்ளிகளின் ஆசிரியர் தின நிகழ்வும் கலைவிழாவும்!!

500

சிரியர் தின நிகழ்வும் கலைவிழாவும்

வவுனியா பூந்தோட்ட பிரதேச முன்பள்ளிகளுக்கு இடையிலான கலைவிழாவும் ஆசிரியர் தினமும் மிக சிறப்பான முறையில் பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய கலாசார மண்டபத்தில் இன்று (23.11.2019) நடைபெற்றது்.

இந் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வவுனியா நகரசபையின் முன்னாள் நகர பிதாவும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான ஜி.ரீ.லிங்கநாதன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன்,

நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும், தற்போதைய நகரசபைஉறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்), ஸ்ரீ நாகராஜா வித்தியாலய ஆசிரியரும், வவுனியா நகரசபையின் உறுப்பினருமான சு.காண்டீபன், முன்பள்ளி கோட்ட இணைப்பாளர் திருமதி சசிகலா, முதியோர் சங்கத் தலைவர் வேலாயுதம்பிள்ளை ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

பிரதேச முன்பள்ளி சிறார்களின் கலை நிகழ்வுகள், ஆசிரியர் கௌரவம் என்பன சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.