கடும் மழை
வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காலநிலை தீவிரமடைந்துள்ளதனால் நாட்டில் மேலும் மழை பெய்யும் என்று எதிர்வு என்று வானிலை அவதான மையம் இந்த எதிர்வுக்கூறலை வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை, பதுளை மற்றும் பொலநறுவை ஆகிய பிரதேசங்களில் 150 மில்லிமீற்றர் வரை எதிர்வரும் நாட்களில் மழைபெய்யும்.
முல்லைத்தீவு, வவுனியா, அநுராதபுரம், ரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, நுவரெலியா, காலி மாத்தறை மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யும்.
இதேவேளை வடக்கு வடமத்திய, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் 50 கிலோமீற்றர் வரையான காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.