இளைஞனுக்கு நேர்ந்த கதி

இறுக்கமான உடை அணிந்ததால், நுரையீரல் பா திப்பிற்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார் வடஇந்தியாவை சேர்ந்த 30 வயதான இளைஞர். தொழிலதிபரான சவ்ரப் ஷர்மா நீண்ட தூரப் பயணமாக காரில் சென்றுள்ளார். அதிகப்படியான கால் வலியுடன் வீடு திரும்பியுள்ளார் அவர்.

இரண்டு நாட்களுக்கு பின் வலி தொடர்ந்ததால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு நுரையீரலிலுள்ள ஆர்ட்டரி ஒன்றில் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதற்கு காரணம் அவர் அணிந்திருந்த இறுக்கமான ஜீன்ஸ் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக நீண்ட நேர பயணத்திற்கு பின் அலுவலகம் திரும்பிய ஷர்மா அங்கு திடீரென ம யக்கமடைந்திருக்கிறார். சற்று நேரத்தில் எழுந்த அவர் மீண்டும் ம யக்கமடைந்துள்ளார். இதனால், மருத்துவர்கள் அவரை முழுவதும் சோ தனை செய்து அவருக்கு இரத்த அ ழுத்தம் குறைந்து கொண்டே வருவதை கண்டறிந்துள்ளனர்.

மேலும், ஷர்மாவை குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், நீண்ட காலமாக இரத்த அ ழுத்தம் குறைவாக இருந்ததால் அவருடைய சிறுநீரகங்களும் சரியாகச் செயல்படவில்லை. அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.

நீண்ட தூரம் வாகனம் ஓட்டிய காரணத்தால் அவருடைய நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டது என்று கண்டறிந்தோம். அதன்பின் அவர் அந்த ஜீன்ஸ் அணிந்திருந்ததுகூட காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ஷர்மா, “நான் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து ரிஷிகேஷுக்குச் சென்றுகொண்டிருந்தேன். என்னுடைய கார் ஆட்டோமேட்டிக் என்பதால், பயணம் முழுவதும் இடது கால் அசையாமல் இருந்தது. சிறிது நேரத்தில் காலின் பின்பகுதி மற்றும் முழங்கால்கள் வ லிக்கத் தொடங்கின.

ஆனால், நான் அதைப் பொருட்படுத்தவில்லை. இரண்டு நாள்களுக்குப் பிறகு, கால்கள் வீங்கிய நிலையில் அலுவலகத்தை அடைந்த பிறகு, அதிகப்படியான வியர்வை மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மருத்துவமனை சென்று பரிசோதித்துப் பார்த்ததில் நுரையீரல் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது” என்று கூறியுள்ளார்.




