எச்.ஐ.வி. குறித்த ஆராய்ச்சியில் புதிய திருப்புமுனை!!

569

AIDSஎச்.ஐ.வி. குறித்த ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க திருப்புமுனையைக் கண்டறிந்துள்ளதாக சீன நாட்டு ஆய்வாளர்கள் பத்திரிகை வாயிலாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் மூலம் இந்த நோயை முற்றிலும் குணப்படுத்தவோ அல்லது அதற்கான புதிய மருந்துகளோ கண்டுபிடிக்க முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வைரஸ் தொற்றுநோய்க் காரணி கட்டமைப்பு ஆய்வில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஆய்விலேயே இவர்கள் புதிய முன்னேற்றங்களைக் கண்டறிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

சீனாவில் உள்ள ஹர்பின் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் வாழ்க்கை அறிவியல் பள்ளியில் கட்டமைப்பு மூலக்கூறு உயிரியல் பேராசிரியராகப் பணி புரிந்துவரும் ஹுவாங் சிவி தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இதன் முடிவுகள் இயற்கை என்ற அறிவியல் இதழின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஆண்டி வைரசை அழிக்க உதவும் எச்ஐவி-1 புரதத்தின் கட்டமைப்பின் செயல்பாடுகள் விளக்கப்பட்டுள்ளன.

கடந்த 2012 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் முடிவுகள் மூலம் செயல்தன்மை கொண்ட புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட முடியும் என்று இந்த ஆய்வு விளக்குகின்றது.

1981 ஆம் ஆண்டில் எய்ட்ஸ் வைரஸ் கண்டறியப்பட்டதிலிருந்தே அதனுடைய நோய்த்தொற்று காரணி உட்பட பல முக்கிய விஷயங்கள் அதில் கண்டறியப்படாமல் இருந்தது.

இதுவே நோய்த்தொற்று மற்றும் போலிகளைக் கண்டறியும் முக்கிய காரணியாக விளங்கி வந்துள்ளது என்று ஆய்வின் முடிவு தெரிவிக்கின்றது.

சமீபகாலங்களில் உலகம் முழுவதும் எய்ட்ஸ் ஆய்வாளர்களின் ஆய்விலும் இந்த நோய்த்தொற்று காரணியே முக்கிய ஆய்வுக்குரிய பொருளாகவும் விளங்கி வந்தது.

தங்களுடைய ஆய்வு முடிவுகள் வெளிவந்ததன்மூலம் சீனாவே தற்போது இந்த ஆய்வில் முன்னணியில் இருப்பதாக ஹுவாங் தெரிவிக்கின்றார்.