வவுனியா வர்த்தக சங்கத்தின் முயற்சியினால் அழகாக மாற்றமடையும் வவுனியா நகரம்!!

809

அழகாக மாற்றமடையும் வவுனியா நகரம்

வவுனியா நகரை ஏனைய மாவட்டங்களுக்கு முன்மாதிரியாக அழகாக மாற்றும் செயற்றிடத்தினை வவுனியா வர்த்தக சங்கத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா நகரசபையுடன் இணைந்து வவுனியா வர்த்தக சங்கத்தினர் வவுனியாவை பசுமையான நகராக மாற்றும் முதற்கட்ட நடவடிக்கையாக (மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகே) வவுனியா நகரின் வீதியின் நடுவே மரங்களை நாட்டும் வைபவம் இன்று (28.11.2019) காலை இடம்பெற்றது.

வவுனியா வர்த்தக சங்கத்தின் தலைவர் சுஜன் சண்முகராஜா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸலாத சில்வா, உதவி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.பி.மல்வலகே,

வவுனியா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சம்பத் ரெரேரா, வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி, வவுனியா நகரசபையின் தலைவர் இராசலிங்கம் கௌதமன்,

செயலாளர் இ. தயாபரன், நகரசபை உறுப்பினர் ரி.கே.இராசலிங்கம், வவுனியா வர்த்தக சங்க செயலாளர் ஆறுமுகம் அம்பிகைபாலன், உறுப்பினர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டு மரங்களை நாட்டி வைத்தனர்.

50க்கு மேற்பட்ட மரங்கள் வவுனியா நகரில் வீதியின் நடுவே நாட்டி வைக்கப்படவுள்ளதுடன் இவற்றிக்கான நிதியினை வவுனியா வர்த்தக சங்கத்தினர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.