வவுனியாவில் வீதிப் போக்குவரத்து பா துகாப்புக் கூட்டம்!!

545

பா துகாப்புக் கூட்டம்

வவுனியாவில் வீதிப் போக்குவரத்து பா துகாப்பு தொடர்பான கூட்டம் பொலிஸ் அத்தியட்சகர் காரியலாயத்தில் அமைந்துள்ள சேவை பயிற்சி நிலையத்தில் இன்று (28.11.2019) காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸலாத சில்வா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.பி.மல்வலகே மற்றும் வவுனியா மாவட்டத்திலிலுள்ள அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்,

போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரிகள், போக்குவரத்துப் பொலிஸார், அரச திணைக்கள உயர் அதிகாரிகள், வர்த்தக சங்கத்தினர், சுகாதாரப் பிரிவினர், வீதி அதிகார சபையினர், பாடசாலை சமூகத்தினர், முச்சக்கரவண்டி சங்கத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் டெங்கின் தா க்கம் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள், கடந்த சில மாதங்களில் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட போக்குவரத்து மாற்றங்கள்,

வீதி விபத்தினை கட்டுப்படுத்த செயற்படுத்த வேண்டிய நடவடிக்கைகள், பொலிஸாரின் செயற்பாடுகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.