வவுனியாவில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பொதுஅறிவு வினாடி வினாப்போட்டி!!

705

வினாடி வினாப்போட்டி

மாவட்ட மட்ட மாற்றுத்திறனாளிகளின் தினத்தினை முன்னிட்டு வவுனியா மாவட்டத்திலுள்ள அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான பொது அறிவு வினாடி வினாப்போட்டி இன்று (28.11.2019) காலை 9.30 மணி தொடக்கம் மதியம் 1.30 மணி வரை இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற பொதுஅறிவு வினாடி வினாப் போட்டியில் 15க்கு மேற்பட்ட அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இப் போட்டிகளின் பிரதான நடுவராக வவுனியா மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் மற்றும் நடுவர்களாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஜனாத்தனி , கோமளா ஆகியோர் பங்குவகித்தனர்.