வவுனியாவின் அழகை கண்டு ரசித்த மக்களுக்கு இரவு காத்திருந்த அ திர்ச்சி!!

997

காத்திருந்த அ திர்ச்சி

வவுனியா நகரசபையுடன் இணைந்து வவுனியா வர்த்தக சங்கத்தினர் வவுனியாவை பசுமையான நகராக மாற்றும் முதற்கட்ட நடவடிக்கையாக (மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகே) வவுனியா நகரின் வீதியின் நடுவே மரங்களை நாட்டும் வைபவம் இன்று (28.11.2019) காலை இடம்பெற்றது.

நகரசபை தலைவர், செயலாளர், உறுப்பினர், பொலிஸ் உயர் அதிகாரிகள், வர்த்தக சங்கத்தினர் எனப் பலரும் இணைந்து நாட்டிவைத்த மரத்தின் நிலமை தற்போது க வலைக்கிடமாக மாறியுள்ளது.

வவுனியா வர்த்தக சங்கத்தினரின் முயற்சி வவுனியா நகரசபையினரின் அ சமந்தப் போக்கினால் நாசமாக்கிப் போகும் நிலமை ஏற்பட்டுள்ளது.

இன்று (28.11) இரவு 8.30 மணியளவில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகே நாட்டப்பட்ட மரங்களை கட்டாக்காலி மாடுகள் சே தமாக்கியுள்ளன.

வவுனியா நகரசபையினரே கட்டாக்காலி மாடுகள் தொடர்பில் உங்கள் பார்வை திரும்புமா? எப்போது வவுனியா நகர் அழகாக மாறும் நகரசபையின் நடவடிக்கைக்காக காத்திருக்கும் மக்கள்.

10க்கு மேற்பட்ட மாடுகள் குறித்த மரங்களின் இலைகளை பிடுக்கி சாப்பிடும் காட்சிகள் எமது கமராவில் இவ்வாறு பதிவாகியுள்ளது. ஆதாரத்திற்காக புகைப்படம் மற்றும் காணொளி எடுக்கப்பட்ட பின்னர் மாடுகள் அங்கிருந்து ஊடகவியலாளர்களால் விரட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.