வவுனியாவில் வெள்ளத்தில் மூழ்கும் நிலையில் புகையிரத தண்டவாளம்!!

800

புகையிரத தண்டவாளம்

வவுனியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக தாண்டிக்குளம் குளத்தில் நீர் நிரம்பி வெளியேறுவதினால் தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள புகையிரத தண்டவாளம் நீரில் முழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தாண்டிக்குளம் குளத்தில் நீர் நிரம்பி மேலதிக நீர் கால்வாய் மூலம் வெளியேறி வருகின்றது. குறித்த கால்வாய் புகையிரத தண்டவாளத்திற்கு அருகே செல்கின்றது. கல்வாயினால் செல்லும் நீரின் மட்டம் புகையிரத தண்டவாளத்திற்கு இணையாக தற்போது உள்ளது.

தொடர்ச்சியாக வவுனியாவில் மழை பெய்யும் சமயத்தில் கால்வாய் நிரம்பி புகையிரத தண்டவாளம் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.