வவுனியாவில் தொடர் மழையால் 30 குளங்களின் அணைக்கட்டுகள் வெட்டப்பட்டு நீர் வெளியேற்றம்!!

567

வவுனியாவில் தொடர் மழையால்..

வவுனியாவில் 30 குளங்களின் அணைக்கட்டுக்கள் வெட்டப்பட்டு பாதிப்பு ஏற்படாத வகையில் நீர் வெளியேற்றப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் இ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியான மழை பெய்ததன் காரணமாக வவுனியாவின் 95 வீதமான குளங்களின் நீர்மட்டம் அதகரித்துள்ளமையால் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் பட்சத்தில் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

குறிப்பாக உடைப்பெடுக்கும் நிலையில் காணப்பட்ட 30 குளங்களின் அணைக்கட்டுக்கள் வெட்டப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. செட்டிகுளம் பகுதியில் உடைப்பெடுத்த உடையார்குளம் அணை அமைக்கப்பட்டு நீர் வெளியேற்றம் தடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பாதிப்புக்கள் தடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் உடைப்பெடுக்கும் நிலையில் காணப்படும் குளங்களை மண் பைகளைக் கொண்டு அணை அமைத்து தடுக்கும் நடவடிக்கைகளும் கமக்கார அமைப்புக்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.