வவுனியாவை டெங்கு அற்ற பிரதேசமாக உருவாக்க ஒன்றிணைந்த இளைஞர்கள்!!

719

ஒன்றிணைந்த இளைஞர்கள்

இன்றையதினம் (12.12.2019) வவுனியா நகரசபை பூங்காவில் “வவுனியா கெத்து” tiktok நண்பர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில் பல tiktok செயலி நண்பர்கள் ஒன்றுகூடியிருந்தனர்.

இவ் ஒன்றுகூடலை சிறகுகள் இளைஞர் அமைப்பின் அனுசரணையில் தமது விசேட டெங்கு ஒழிப்பு நாளாக மாற்றியுள்ளார்கள்.

வவுனியா நகரப் பகுதிகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டியதுடன் டெங்கு அற்ற வவுனியவை உருவாக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனவும் அதன் முக்கியத்தவத்தையும் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இலங்கையில் பல பாகங்களில் இருந்து பல இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.