வவுனியாவில் வீதியில் நின்றவர்கள் மீது மோதிய கார் : மூவர் படுகாயம்!!

310

வீதியில் நின்றவர்கள் மீது..

வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் இன்றிரவு ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வீதியில் நின்றவர்கள் மீது கார் ஒன்று மோதியுள்ளதாக தெரியவருகிறது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த மூவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இருந்து காளி கோவில் வீதியில் குருமன்காடு நோக்கி சென்ற காரே இந்த விபத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன்,

காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.