வவுனியா நகரில்..
வவுனியாவில் அதிகரித்துள்ள டெங்கினை கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா வர்த்தக சங்கத்தினருடான கலந்துரையாடல் வவுனியா சுகாதார அதிகாரி பணிமணையில் இன்று (13.12.2019) காலை 10 மணி தொடக்கம் 12.30 மணி வரை இடம்பெற்றது.
பொது சுகாதார பரிசோதகர் சிவரஞ்சன் தலமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் வவுனியா வர்த்தக சங்க உறுப்பினர்கள், வர்த்தகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா நகரத்தினை டெங்கு அற்ற பிரதேசமாக மாற்றும் நோக்கில் சமூகத்தினை ஒன்றுதிரட்டி அவர்கள் மூலமாக டெங்கு ஒழிப்பினை முன்னெடுப்பதுடன் வவுனியா வர்த்தக சங்கத்தினருடன் இணைந்து வாரத்தில் ஒரு நாள்,
வர்த்தக நிலையங்கள் , வீடுகள் போன்ற இடங்களை பார்வையிடுவதுடன் டெங்கு கட்டுப்பாட்டினை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு திட்டமிடல் செயற்றிட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதன் போது வர்த்தகர்கள், வைத்தியர், பொது சுகாதார பரிசோகர்கள், பொதுமக்கள் அடங்கிய 9 குழுவினை அமைந்து வாரத்தில் ஒரு நாள் வவுனியா நகர் பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.