வவுனியாவை அழகாக மாற்றும் முயற்சி

கடந்த சில வாரங்களாக நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் பலர் ஒன்றிணைந்து நகரங்களிலும் அதனைச் சூழ உள்ள பிரதேசங்களிலும் இருக்கும் சுவர்களை வண்ணமயமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றியீட்டி ஜனாதிபதி ஆனதன் பின்னர் நாட்டின் சுற்றுப் புறச் சூழல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.

அவரின் செயற்பாடுகளைப் பின்பற்றும் வகையில், தற்போது வீதியோரச் சுவர்களில் சுற்றுச் சூழலை அழகுபடுத்தும் நோக்கில் பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கையில் வவுனியாவில் சிவில் பாதுகாப்பு குழு, பொதுமக்கள், இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தக சங்கத்தினர் இணைந்து சுவரோவியம் வரையும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் வவுனியா காமினி மகா வித்தியாலய சுற்று மதிலில் சிவில் பாதுகாப்பு குழுவினர் மற்றும் பொதுமக்கள், இளைஞர்கள் இணைந்து இன்று (14.12.2019) காலை 11மணியளவில் ஓவியங்கள் வரையும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததுடன்,

வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் சுவர்களில் மதியம் 12.30 மணியளவில் வவுனியா வர்த்தக சங்கத்தினருடன் இணைந்து பல்கலைக்கழக மாணவர்கள் ஓவியங்கள் வரையும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறு வரையப்படும் ஓவியங்கள் தொடர்பில் பல மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும், வி மர்சனங்கள் மற்றும் அ ரசியல் போன்றவற்றையும் தாண்டி இவர்களின் முயற்சி பாராட்டத்தக்கது.





