வவுனியாவில் தீவிரமடையும் டெங்கு : விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு!!

519

விசேட வேலைத்திட்டம்

வவுனியாவில் தீவிரமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த மாபெரும் டெங்கு ஒழிப்பு மேற்பார்வை நடவடிக்கை இன்று (14.12.2019) வவுனியாவின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது டெங்கு தாக்கம் அதிகம் உள்ள வவுனியா நகரிலுள்ள வீடுகள், வர்த்தக நிலையங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிற்கு சென்ற உத்தியோகத்தர்கள் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அடையாளப்படுத்தியதுடன்,

நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த உரிமையாளர்களிற்கு எ ச்சரிக்கை விடுத்திருந்ததுடன் , சிலர் மீது சட்டநடவடிக்கையும் மேற்கொண்டனர்.

வவுனியா வர்த்தகசங்கம், பொலிஸ் திணைக்களம், சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மற்றும் பொதுமக்களை உள்ளடக்கியதான குழுவினர் குறித்த டெங்கு ஒழிப்பு மேற்பார்வை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.