த ற்கொ லை செய்துகொள்ள முயற்சித்த பெண்ணை காப்பாற்றிய கடற்படையினர்!!

448

காலி துறைமுகத்தில்..

காலி துறைமுகத்தில் நீரில் மூழ்கிய பெண் ஒருவரை கடற்படையினர் நேற்றைய தினம் காப்பாற்றியுள்ளனர். காலி துறைமுக நுழைவாயிலிலிருந்து காலி நகரத்தை நோக்கிய கடலில் ஒருவர் மூழ்குவதை அவதானித்த காலி துறைமுகத்தின் பாதுகாப்பில் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் உடனடியாக நீரில் மூழ்கிய பெண்ணை மீட்க ஒரு நிவாரண குழுவை அனுப்பியுள்ளனர்.

அதன் பின்னர் குறித்த பெண் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் குறித்த பெண் காலியில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் கட்டடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அதன்பின்னர் கடற்படை மருத்துவ உதவியாளர்கள் முதலுதவி அளித்ததுடன், மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் குறித்த பெண்ணை அனுமதித்துள்ளனர்.

ஹிக்கடுவையில் வசிக்கும் 48 வயதான பெண் ஒருவரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் அந்த பெண் த ற்கொ லைக்கு முயன்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்ப்பாக மேலதிக விசாரணைகளை கராபிட்டி, வைத்தியசாலை பொலிஸார் மற்றும் காலி துறைமுக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்