சிறைச்சாலை வான் மரத்துடன் மோதியதில் அதிகாரியொருவர் பலி : உ யிருக்கு போ ராடும் கைதி!!

464

சிறைச்சாலை வான்..

சிறைச்சாலை வான் ஒன்று சீகிரிய திகன்பதன பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் உ யிரிழந்துள்ளார். இந்நிலையில் சிறைச்சாலை கைதி ஒருவரும் மேலும் இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறைக்கைதி ஒருவரை வழக்கு விசாரணைக்காக கண்டி – பல்லேகல்ல சிறைச்சாலையில் இருந்து ஹிங்குராக்கொட நீதிமன்றுக்கு அழைத்து செல்லும்போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் குறித்த சிறைச்சாலை வான் வீதீயை விட்டு விலகி மரத்தில் மோதி, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் கண்டி – பல்லேகல்ல சிறைச்சாலையில் கடமையாற்றிய உதயகுமார ஏக்கநாயக்க என்பவரே பரிதாபமாக உ யிரிழந்துள்ளார்.