அதிக விலைக்கு அரிசி விற்பனை

வவுனியாவில் அரிசி விலை தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினரால் 9 வர்த்தக நிலையங்களுக்கு எ திராக வழக்கு தா க்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடு மற்றும் சம்பா ரக அரிசிகளுக்கான அதிகபட்ச சில்லறை விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டு நேற்றைய தினம் வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.

இதன்படி ஒரு கிலோ நாடு மற்றும் சம்பா ரக அரிசியின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 98 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில், வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நாடு மற்றும் சம்பா ரக அரிசிகளுக்கான அதிகபட்ச சில்லறை விற்பனை விலை நிர்ணயம் வெளியிடப்பட்ட நிலையில் வவுனியாவில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினர் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

வவுனியா பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினர் நேற்று வவுனியா நகர் முழுவதும் இவ்வாறு தி டீர் சோ தனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததுடன், அரிசி விலை தொடர்பிலும் கவனத்தினை செலுத்தியிருந்தனர்.

குறித்த சோ தனை நடவடிக்கையின் போது, அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தமை, விலைப்பட்டியலில் அதிக விலை பிரசுரித்திருந்தமை, காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை, பற்றுச்சீட்டு வழங்காமை,

பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்தமை, விலை மற்றும் காலாவதி திகதி பொறிக்கப்படாத நிலையில் பொருட்களை விற்பனை செய்தமை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஒன்பது வர்த்தக நிலையங்களிலிருந்து பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் பொருட்கள் கையகப்படுத்தப்பட்டன.

குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரினால் 2020 ஜனவரி மாதம் 07ஆம் திகதி வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் பல வர்த்தக நிலையங்களில் தி டீர் சோ தனை நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதுடன், பல வர்த்தக நிலையங்களுக்கு எ திராக நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





