வவுனியாவில் சாயம் பூசப்பட்ட அரிசி?

491

வவுனியாவில்..

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வவுனியா வர்த்தக நிலையங்களில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் விசேட சோ தனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று வவுனியா – மன்னார் வீதியில் அமைந்திருந்த பல வர்த்தக நிலையங்களில் சோ தனை நடவடிக்கை இடம்பெற்றது.

இதன்போது வேப்பங்குளம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஓன்றில் நிறப்பூச்சு பூசப்பட்டு சிவப்பு சம்பா அரிசி விற்பனை செய்யப்பட்டதாக தெரிவித்த பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினர்,

குறித்த அரிசியை ப ரிசோதனை செய்ததுடன் மேலதிக ப ரிசோதனைக்காக மூன்று பொதிகளில் அரிசி மாதிரிகள் பெறப்பட்டு சீல் செய்து எடுத்துச் சென்றனர்.

அத்துடன், வவுனியா நகரப் பகுதியில் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் வர்த்தமானியில் நாடு மற்றும் சம்பா ரக அரிசிகளுக்கு அரசாங்கம் நிர்ணய விலையாக 98 ரூபாய் அறிவித்துள்ள நிலையில்,

கூடிய விலைக்கு குறித்த அரிசிகளை விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, அதிக விலையை காட்சிப்படுத்தியமை உள்ளிட்ட கு ற்றச்சாட்டுகளுக்காக 9 வர்த்தகர்களுக்கு எ திராக வழக்கு தா க்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.