வவுனியாவில் இராணுவத்தின் வாகனத்துடன் மோதுண்டு விபத்து : இளைஞன் படுகாயம்!!

731

விபத்து

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இராணுவத்தினரின் வாகனத்துடன் மோதுண்டு மோட்டார் சைக்கில் விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (26.12.2019) மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த இராணுவத்தினரின் கப் ரக வாகனத்துடன் எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இவ் விபத்து நிகழ்ந்துள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கில் சாரதியான வவுனியா பம்பைமடுவினை சேர்ந்த 22வயதுடைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கில் கடுமையான சேதமடைந்துள்ளதுடன் கப் ரக வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதுடன் இரு வாகனத்தினையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.