வவுனியாவில் விவசாயியின் மகன் 3A சித்திகளைப் பெற்று சாதனை!!

942

தங்கராசா பிரதீஸ்

எனது தந்தை விவசாயம் மேற்கொண்டு கஸ்டப்பட்டு தான் என்னை படிக்க வைத்தார். அவர் சிந்திய வியர்வையின் பலனை தற்போது நான் அடைந்துள்ளேன் என வவுனியா மாவட்டத்தில் வர்த்தகப் பிரிவில் முதலாவது இடத்தினை பெற்ற தங்கராசா பிரதீஸ் தெரிவித்தார்.

வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தினை சேர்ந்த தங்கராசா பிரதீஸ் 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலை பெற்றுள்ளார்.

தனது பரீட்சைப் பெறுபேறு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தினசரி 5 கிலோமீற்றர் பேருந்தில் பயணித்து தான் பாடசாலைக்கு வருகை தந்து கல்வி கற்றேன். தினமும் பாடசாலையில் கற்பிக்கும் பாடங்களை வீட்டிற்கு சென்றதும் மீளப்படிப்பேன் அத்துடன் பரீட்சை தாள்களும் செய்து பார்ப்பது வழமை. எனது தந்தை விவசாயம் மேற்கொண்டு என்னை கற்பித்தார்.

சட்டத்தரணி ஆகவதே எனது எதிர்கால இலட்சியமாக கொண்டு இப் பரீட்சை பெறுபேற்றினை பெற்றுள்ளேன். கஷ்டம் என்பது பெரிய ஒரு விடயமே இல்லை. எமது மனநிலை படிப்பில் மாத்திரம் இருந்தால் சிறந்த பேறுபேற்றை அடைய முடியும் என தெரிவித்தார்.