வவுனியாவில் கோர விபத்து : 12 பேர் வவுனியா வைத்தியசாலையில்!!

963

கோர விபத்து

வவுனியா ஈரப்பெரியகுளத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 12 பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (30.12.2019) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றதாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

தங்காலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தொன்று கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதுண்டு குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது பேருந்தில் பயணித்தவர்களில் 4 இராணுவத்தினர் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைக்காக அம்புலன்ஸ் மூலம் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.