வவுனியா மக்களுக்காக வீதியில் இறங்கிய முச்சக்கரவண்டி மற்றும் வர்த்தக சங்கத்தினர்!!

395


வவுனியா மக்களுக்காக..



வவுனியாவை குப்பையற்ற பிரதேசமாக மாற்றும் நோக்கில் வவுனியா பொலிஸாருடன் இணைந்து முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தினர், வர்த்தக சங்கத்தினர் இன்று (03.01.2019) மாபெரும் சிரமதான பணியினை தொடர்ந்தனர்.



வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒன்று கூடிய முச்ச்கரவண்டி உரிமையாளர் சங்கம் மற்றும் வர்த்தக சங்கத்தினர் உறுப்பினர்கள் அங்கிருந்து பகுதி பகுதியாக பிரிந்து சென்று சிரமதான பணியினை முன்னெடுத்திருந்தனர்.




வவுனியா நகர், புகையிரத நிலைய வீதி, பழைய பேருந்து நிலையம், பஜார் வீதி, மணிக்கூட்டு கோபுரம், முதலாம் குருக்குத்தெரு போன்ற வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் சிரமதானப் பணி இடம்பெற்றது.