வவுனியாவில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட 200 மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய வர்த்தக சங்கம்!!

357

200 மாணவர்களுக்கு..

வவுனியா வர்த்தக சங்கத்தின் அனைவருக்கும் கல்வி உதவித்திட்டத்தினூடாக பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (04.01.2020) காலை வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது வவுனியாவில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட 200 மாணவர்களை தெரிவு செய்து அவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

வர்த்தக சங்கத்தின் தலைவர் சுஜன் சண்முகராஜா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பொலிஸ் உயர் அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு துறை அதிகாரிகள், வவுனியா நகரசபை தலைவர், உபதலைவர், உறுப்பினர்கள்,

வவுனியா தெற்கு பிரதேச சபை தலைவர், சுகாதார வைத்திய பணிமணை அதிகாரிகள், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்க தலைவர், உறுப்பினர்கள்,

வர்த்தக சங்க உறுப்பினர்கள், மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கோவில்குளம் சிவன் கோவில் அன்பக மாணவர்களின் நடனம் இடம்பெற்றிருந்ததுடன், நடனம் அங்கிருந்த அனைவரினதும் மனதையும் கவர்ந்திருந்தது.

வவுனியா வர்த்தக சங்கத்தினர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இது போன்ற பல்வேறு செயற்றிட்டங்களை வவுனியாவில் கடந்த சில மாதங்களாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.