வவுனியாவில் வாகன விபத்து : சாரதி தப்பி ஓட்டம்!!

412

வாகன விபத்து

ஓமந்தை, கள்ளிகுளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சட்டவிரோதமான மரங்களை க டத்திச்சென்ற கப்ரக வாகனம் ஒன்று விபத்திற்குள்ளாகியது.

இந்த சம்பவம் இன்று (05.01.2020) அதிகாலை 4 மணியளவில் ஓமந்தை ஏ9 வீதி கள்ளிகுளம் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வாகனம் சட்டவிரோத மரங்களுடன் வவுனியா நோக்கிசென்ற நிலையில், கள்ளிக்குளம் வளைவில் திருப்ப முற்பட்டபோது வீதியின் அருகில் இருந்த மின்சார கம்பத்துடன் மோதுண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதன்போது வாகனத்தை செலுத்திய சாரதி தப்பியோடியுள்ளதாக தெரிவித்த ஓமந்தை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.