வவுனியாவில் சிறுநீரக பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரம்!!

398

சிறுநீரக பரிசோதனை

வவுனியா மாவட்ட சிறுநீரக நோய் தடுப்பு பிரிவினரால் இன்று (06.01.2020) வவுனியா நகரப்பகுதியில் நடமாடும் சிறுநீரக பரிசோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

‘ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சிறுநீரகங்களை பாதுகாப்போம்’ எனும் தொனிப்பொருளில் சிறுநீரக பரிசோதனை நடவடிக்கையானது, நாட்பட்ட சிறுநீரக நோய் வைத்தியர் பிரசன்னா மற்றும் வவுனியா பிராந்திய சிறுநீரக நோய் தடுப்பு பிரிவு வைத்திய அதிகாரி குசான் ராஜகருண தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

சிறுநீரக நோயுள்ளவர்களை ஆரம்பத்திலேயே அடையாளம் காணும் முகமாக வவுனியா நகரத்தில் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களிடம் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாவிலுள்ள அரச திணைக்களங்கள், வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களிடம் இரத்தம் பெற்று சிறுநீரக பரிசோதனை செய்யும் நடவடிக்கைள் இடம் பெற்றது.

நீண்டகால சிறுநீரக நோய்களின் தாக்கம் அதிகமாக உள்ள பிரதேசத்தில் வாழ்கின்றவர்கள், குடும்பத்தில் யாருக்காவது சிறுநீரக நோய்கள் இருப்பவர்கள், குடும்பத்தில் யாராவது சிறுநீரக நோயினால் இறந்திருப்பின் இவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையாகவே சிறு நீரக பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.