வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு!!

355

செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில்..

வவுனியா – செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில் இன்று (07.01.2020) அதிகாலை இளைஞர் ஒருவரின் ச டலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

மெனிக்பாம் பகுதியில் உள்ள பிரதான வீதிக்கு முன்பாக இளைஞர் ஒருவரின் ச டலம் வீதியில் காணப்பட்டமை தொடர்பாக பறயனாலங்குளம் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இச் சம்பவத்தில் மெனிக்பாம் பகுதியைச் சேர்ந்த பா.நிரோஜன் வயது 35 என்ற இளைஞரே உ யிரிழந்துள்ளதுடன் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
உ யிரிழந்த நபரின் ச டலம் செட்டிகுளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்தநபரை அவ்வீதியால் பயணித்த வாகனங்கள் மோதிவிட்டு தப்பிச்சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.