வவுனியாவில் இலவச ஆடை வங்கி திறந்து வைப்பு!!

1371

இலவச ஆடை வங்கி

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இலவச ஆடை வங்கி வவுனியா நகரம் வடக்கு சிரேஸ்ர பிரஜைகள் சங்கத்தினரால் திறந்து வைக்கப்பட்டது.

இலவச ஆடை வங்கியினை திறந்து வைக்கும் நிகழ்வு வைத்தியசாலை கட்டிடத்தில் வவுனியா நகரம் வடக்கு சிரேஸ்ர பிரஜைகள் சங்கத்தின் தலைவர் சி.சு.கோணேஸ்வரலிங்கம் தலைமையில் இன்று (10.01.2020) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் கே.நந்தகுமார், வவுனியா உதவி பிரதேச செயலாளர் ச.பிரியதர்சினி, தாதியர் கல்லூரியின் அதிபர் நந்தகுமார், மாவட்ட முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் தர்சினி பாலேந்திரேன்,

பிரதம தாதிய பரிபாலகர் எஸ்.குனசீலன், தாதிய உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், வவுனியா சிரேஸ்ர பிரஜைகள் சங்கத்தின் செயலாளர், பொருலாளர், உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா சிரேஸ்ர பிரஜைகள் சங்கத்தினரால் வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட இவ் இலவச ஆடை வங்கியில் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்கள் தங்களுக்கு பிடித்த ஆடைகளை ஆடை வங்கியில் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன் ஆடை வங்கியில் பெரியோர், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஆடைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இவ் வங்கியில் புதிய ஆடைகள் மற்றும் தம்வசம் உள்ள பாவனைக்கு மேலதிகமான நல்ல நிலையில் உள்ள ஆடைகளையும் பொது மக்கள் வைப்பு செய்து நோயாளர்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்குட்பட்டோருக்கு உதவ முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.