தமிழ் நாடு, திருநெல்வேலி தமிழர் அமெரிக்காவின் உயர் நீதிமன்ற நீதியரசராக பதவி ஏற்பு..!

475


தமிழ் நாடு, திருநெல்வேலியை பூர்விகமாகவும் சண்டிகாரை பிறப்பிடமாக கொண்டவருமான சிறிகாந்த்பத்மனாபன் சிறினிவாசன் அமெரிக்க உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ளார். அமெரிக்காவில் உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்தபடியாக, உயர் அதிகாரங்களை கொண்ட நீதிமன்றமாக இருப்பது வாஷிங்டன் டிசி மேல்முறையீட்டு உயர் நீதிமன்றமாகும்.

இதில் ஒரு நீதிபதியாக அமெரிக்காவாழ் இந்தியரான ஸ்ரீ.ஸ்ரீனிவாசன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு இந்திய மக்களின் சார்பில் நடந்த பாராட்டு விழாவில், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிரூபமா ராவும் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், “ஸ்ரீனிவாசன் சாதித்து காட்டியுள்ளார்” என்று புகழ்ந்தார்.



ஸ்ரீனிவாசன் பேசுகையில், “உங்களின் பாராட்டுகள் என்னை மிகவும் கௌரவப்படுத்தி உள்ளன. உங்களின் பேராதரவு என்னை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது” என்றார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவால் கடந்த ஆண்டு ஜூன் 11ம் திகதி, ஸ்ரீனிவாசன் இப்பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால், கடந்த ஜனவரியில் செனட் சபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதால், ஒபாமாவின் பரிந்துரை மீது வாக்கெடுப்பு நடத்தப்படாமல், அந்த பரிந்துரை ஜனாதிபதிக்கே திருப்பி அனுப்பப்பட்டது.

இந்நிலையில், ஒபாமா மீண்டும் ஸ்ரீனிவாசனை இப்பதவிக்கு பரிந்துரைத்தார். இதில், அரிதிலும், அரிதாக 97,0 என்ற ஏகோபித்த செனட் சபை ஆதரவுடன், ஸ்ரீனிவாசன் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். சிறினிவாசன் ஹவாய் சட்டக் கலூரியில் பயின்றவர். இவரது தந்தை மற்றும் தாய் ஆகியோர் அமெரிக்காவில் விரிவுரையாளர்களாக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.