வவுனியா நெளுக்குளம் வயலில் இறந்து கிடக்கும் மூன்றுக்கு மேற்பட்ட மாடுகள் : தொடரும் அவலம்!!

465

நெளுக்குளம் வயலில்..

வவுனியா நெளுக்குளம் பகுதியில் அமைந்துள்ள வயல்வெளியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக உ யிரிழந்து வரும் மாடுகளினால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் அ ச்சநிலையும் ஏற்பட்டுள்ளது.

வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட குழுமாட்டுச்சந்தி பகுதிக்கு அண்மையுள்ள வயல் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக தினமும் ஒரு மாடு வீதம் உ யிரிழந்த வண்ணம் உள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதுடன் மாடு வளர்ப்பாளர்கள் அ ச்சத்துடன் இருந்து வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பான நிலமைகளை ஆராய்வதற்கு எமது பிராந்திய செய்தியாளர் அப்பகுதிக்கு சென்ற சமயத்தில் வயல் பகுதியில் ஒர் மாடு உயிருக்கு போ ராடிய நிலையில் காணப்பட்டுள்ளது.

அதனையடுத்து பிராந்திய செய்தியாளர் வவுனியா அரச கால்நடை வைத்திய அலுவலகத்தினை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு இவ்விடயம் தொடர்பாக தெரிவித்த சமயத்தில்,

எமது அலுவலகத்தில் பணியாற்றும் கால்நடை வைத்தியர் சுகயீன விடுமுறையில் உள்ளமையினால் எம்மால் சமூகளிக்க முடியாது என தெரிவித்துடன் பதில் கடமைக்கு எவரும் இல்லையெனவும் பதில் தெரிவித்துள்ளனர்.

அதனையடுத்து எமது பிராந்திய செய்தியாளரும் வீதியில் சென்ற கிராம சேவையாளர்களும் இணைந்து உ யிருக்கு போ ராடிய மாட்டினை தூக்கி தனியார் வைத்தியசாலை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்த சமயத்திலும் அது பயனளிக்கவில்லை.

மேலும் உ யிரிழந்த மாடுகள் அப்பகுதியில் இருந்து அகற்றப்படாமையினால் துர்நாற்றம் வீசுகின்றது. இதன் காரணமாக மக்கள் அப்பகுதியூடாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி வவுனியா மண்ணின் பிரதான வாழ்வாதாரமான மாடு வளர்ப்பினை மீட்பார்களா? அல்லது மாடுகள் தொடர்ச்சியாக உ யிரிழக்கும் வரையில் காத்திருப்பார்களா?