வவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தாயை காணவில்லை : பசியில் தெருவில் கையேந்தும் பிள்ளைகள்!!

611

மூன்று பிள்ளைகளின் தாயை..

வவுனியா இராசேந்திரகுளம் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு சென்ற மூன்று பிள்ளைகளின் தாயை காணவில்லை என தெரிவித்து பெண்ணின் கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மூன்று பிள்ளைகளின் தாயான குறித்த பெண் வீட்டிலிருந்து (மல்லாவி) காலை 5.30 மணியளவில் வவுனியா இராசேந்திரகுளம் பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு தொழிற்சாலை பேரூந்தில் சென்றுள்ளார்.

இரவு 8.30 மணியாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில் பெண்ணின் கணவர் அயலவர்களின் உதவியுடன் தேடுதலில் ஈடுபட்டிருத்தார்.

 

எனினும் அவரை காணாத நிலையில் கணவர் அடுத்த தினம் காலை குறித்த ஆடைத்தொழிற்சாலைக்கு சென்று மனைவி தொடர்பாக விசாரித்துள்ளார். அதன் பின்னர் தாயை தேடி மூன்று பிள்ளைகளும் அழுததை அடுத்து மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை மேற்கொண்டிருந்தார்.

இறுதியாக காணாமல் சென்ற பெண் நீல நிற ஆடை அணிந்து சென்றுள்ளதுடன் அவரின் தொலைபேசியும் செயலிழந்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக குறித்த ஆடைத்தொழிற்சாலையின் முகாமையாளரை தொடர்பு கொண்டு வினாவிய சமயத்தில் ,

கா ணவில்லை என தெரிவிக்கப்படும் 32 வயதுடைய சந்திரகுமார் சரோஜினி என்ற பெண் எமது தொழிற்சாலைக்கு காலை 7.30 மணிக்கு எமது பேருந்தில் வருகை தந்து தொழிலினை மேற்கொண்டதுடன் மாலை 5.30 மணியளவில் தொழினை நிறைவு செய்து எமது பேரூந்தில் வீடு திரும்பியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் நாம் மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம் எமது பேருந்தில் அன்றையதினம் மாலை 7.30 மணியளவில் மல்லாவி நகரில் இறங்கியுள்ளமை தெரியவருகின்றது என தெரிவித்தார்.

தாயை பிரிந்து 9 வயதுடைய பெண் குழந்தை மற்றும் 12,13 வயதுடைய ஆண் குழந்தைகள் இருவரும் நிர்கதியாகியுள்ளனர்.

குறித்த பெண்ணின் கணவர் சற்று மன நலம் பாதிப்பட்டிருப்பதுடன் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளார். இதன் காரணமாக குழந்தைகள் உணவின்றி அயல் வீடுகளில் கையேந்தி சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குறித்த பெண் தொடர்பான விபரங்களை அறிந்தோர் கீழுள்ள தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ முறைப்பாட்டினை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகின்றது.

கணவர் – 0766562953