வவுனியா செட்டிகுளத்தில் விபத்து : இருவர் படுகாயம்!!

395

விபத்து

வவுனியாவில் இராணுவ வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து நேற்று இரவு 9.50 மணியளவில் வவுனியா- செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா – செட்டிகுளம் , சின்னச்சிப்பிகுளம் பகுதியில் இருந்து, செட்டிகுளம் – ஹயசிங்கபுர இராணுவ முகாம் நோக்கி‌ சென்றுகொண்டிருந்த ஹன்டர் வாகனத்தின் பின்பாக சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள், ஹன்டர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த சின்ன சிப்பிகுளத்தை சேர்ந்த நௌபர் மிர்ஷட், அப்துல் ஜக்பர் ஜூவான் ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு நௌபர் மிர்ஷட்‌ என்ற இளைஞன் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை செட்டிகுளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.