அமெரிக்காவில் ஐந்தில் ஒரு பெண் பலாத்காரத்திற்கு உட்படுகிறார்!!

558

Abuseஅமெரிக்காவில் பல நாடுகளை சேர்ந்த பல்வேறு இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைகளை தடுக்கும் பொருட்டு பாதிப்புகள் குறித்த பதிவுகளை அரசின் ஆய்வு அமைப்புகள் ஆராய்ந்தது.

பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த கூட்டம் ஜனாதிபதி ஒபாமா மற்றும் துணை ஜனாதிபதி ஜோ பிடன் தலைமையில் நடக்கவுள்ள நிலைமையில் தற்போது இந்த ஆய்வு ஆறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது..

அமெரிக்க பெண்களில் ஐந்தில் ஒருவர் தங்களது வாழ்நாளில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.

இதில் பாதிக்கப்பட்டவர்களில் பாதிபேர் கிட்டத்தட்ட 18 வயதிற்கு குறைவான இளம் பெண்களாகவே உள்ளனர். அனைத்து இனத்தை சேர்ந்த பெண்களும் இந்த தாக்குதலுக்கு ஆளாகிறபோது குறிப்பிட்ட சில பெண்கள் மட்டும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

இதில் 33.5 சதவிகிதம்பேர் கலப்பு இனத்தை சேர்ந்த பெண்கள் ஆவர். 27 சதவிகித அமெரிக்க இந்திய பெண்களும், ஹிஸ்பேனிக் இன பெண்கள் 15 சதவிகிதம், கருப்பு இனத்தவர்கள் 22 சதவிகிதம், வெள்ளை இனப்பெண்கள் 19 சதவிகிதத்தினரும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர்.

இவை அனைத்தும் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே நடக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஆண்களும், சிறுவர்களும் இந்தபாதிப்புக்கு ஆளாகின்றனர். இதில் 71 ஆண்களுக்கு ஒருவர் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.