போக்குவரத்து பாதிப்பு..

வவுனியா புகையிரத நிலைய வீதியில் இன்று (25.02.2020) மாலை 6.00 மணியளவில் டிப்பர் வாகனம் ஒன்று வீதியில் தரித்து நின்றமையினால் போக்குவரத்து பாதிப்படைத்திருந்தது.

குருமன்காடு பகுதியிலிருந்து வவுனியா நகர் நோக்கி புகையிரத நிலைய வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனம் கதிரேசு வீதிக்கு அருகே இயந்திர கோளாறு காரணமாக வீதியில் நின்றது.

இதன் காரணமாக குறித்த வீதியூடாக போக்குவரத்து சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.

மாலை நேரங்களில் குறித்த பாதையூடாக அதிகளவு வாகனங்கள் செல்வதினால் போக்குவரத்தினை சீர் செய்ய முடியவில்லை. பின்னர் பொதுமக்களின் உதவியுடன் டிப்பர் வாகனம் வீதியின் கரைக்கு கொண்டு செல்லப்பட்டது.





