வவுனியாவில் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறைப் போ ராட்டம் : ஸ்தம்பிதம் அடைந்த பாடசாலைகள்!!

584

சுகயீன விடுமுறைப் போ ராட்டம்..

நாடு முழுவதும் சம்பளப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் சுகயீன விடுமுறைப் போ ராட்டத்தை இன்று (26.02) முன்னெடுத்துள்ளனர்.

அதற்கமைவாக வவுனியாவிலும் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறைப் போ ராட்டத்தை முன்னெடுத்துள்ளமையால் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் செல்லவில்லை.

அத்துடன் மாணவர்களும் பாடசாலைகளுக்கு செல்லாமையால் பாடசாலைகள் வெறிச் சோடிக் காணப்படுகின்றது.

மேலும், ஆசிரியர் தமது சுகயீன விடுமுறையினை அறிவிக்கும் பொருட்டு வவுனியா பிரதான தபாலகத்தில் குவிந்திப்பதையும் காணக் கூடியதாக இருந்தது.