வவுனியா விவசாய பணிப்பாளரின் இடமாற்றத்தில் இழுபறி நிலை!!

765

பேராதனை விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அ.சகிலாபானுவிற்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்ட நிலையில்

புதிய வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளராக அருந்ததி வேல்சிவானந்தன் இன்று (28.02.2020) காலை 8.30 மணியளவில் அவரது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

புதிதாக கடமைகளை பொறுப்பேற்ற வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அருந்ததி வேல்சிவானந்தன் SLAGS GRADE 01 தரம் ஒன்றினை சேர்ந்தவராவார்.

வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய திணைக்களம் மற்றும் வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணை ஆகியவற்றின் பல்வேறு குறைபாடுகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில்,

வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளராக கடமையாற்றிய அ.சகிலாபாணுவிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இடமாற்றம் வழங்கப்பட்ட வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அ.சகிலாபானு தான் மேல் முறையீடு செய்துள்ளதாகவும் இடமாற்றம் பெற்று செல்ல முடியாது என தெரிவித்து அவரது அறையினை மூடிவிட்டு சாவியினை எடுத்து வெளியே சென்றுள்ளதாக தெரியவருகின்றது.