கண்ணில் டாட்டூ குத்திக்கொண்ட அழகிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த வி பரீதம்!!

579

இளம்பெண்..

போலந்தில் கண்ணில் கருமை நிற டாட்டூ போட்ட இளம்பெண் பார்வையை இழந்த சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோக்லாவ் நகரத்தை சேர்ந்த 25 வயது இளம் பெண் அலெக்சாண்ட்ரா சடோவ்ஸ்கா.

மொடலான இவர், ராப் இசை பாடகர் மற்றும் ஃபைட்டரான போபெக்கின் ரசிகையாக இருக்கிறார். போபெக் தனது இரண்டு கண்களிலும் கருமை நிற டாட்டூவை போட்டிருப்பார். இந்நிலையில் அதேபோன்று தனக்கு கண்ணில் டாட்டூ போட வேண்டும் என அலெக்சாண்ட்ரா, ஒரு டாட்டூ போடும் நபரை அணுகியுள்ளார்.

கண்ணில் டாட்டூ போடும் அனுபவம் இல்லாத போதிலும், பணத்திற்காக அந்த நபர் பொ ய் கூறி அலெக்சாண்ட்ராவிற்கு டாட்டூ போட்டதாக தெரிகிறது.

கண்ணில் கருமை நிறத்தை வைத்து டாட்டூ போட்டு முடித்தவுடன், இரண்டு கண்களும் எ ரிச்சலாக இருப்பதாகவும், வ லிப்பதாகவும் அலெக்சாண்ட்ரா தெரிவித்திருக்கிறார்.

ஆனால் சிறிது நேரத்தில் சரியாகிவிடும் எனக்கூறி, வ லி நிவாரணி ஒன்றை கொடுத்து அப்பெண்ணை டாட்டூ போடும் நபர் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் தனது இடது கண் பார்வையை அலெக்சாண்ட்ரா இ ழந்துள்ளார். உடனே மருத்துவர்களிடம் அப்பெண் சென்றிருக்கிறார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கண்ணில் கருமை நிற டாட்டூ ப ரவியுள்ளது, அதனை சரி செய்ய முடியாது என தெரிவித்ததுடன், வலது பக்க கண்ணிலும் பார்வை போக வாய்புள்ளது என அ திர்ச்சியளித்துள்ளனர்.

அழகிற்கு முக்கியத்துவம் கொடுத்த அ லட்சியதால் மட்டுமே இந்த சம்பவம் நடந்துள்ளது என பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனிடையில் அலெக்சாண்ட்ராவுக்கு டாட்டூ குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.