வவுனியா குருமன்காடு பகுதியில் பேரூந்துடன் மோதுண்டு வான் விபத்து!!

677

விபத்து..

வவுனியா மன்னார் பிரதான வீதியில் குருமன்காடு பகுதியில் இன்று (29.02.2020) மதியம் 12.30 மணியளவில் பேரூந்துடன் வான் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் காவல் அரணுக்கு அருகாமையில் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வீதி ஒரத்தில் தரித்து நின்ற வான் வீதிக்கு ஏற முற்பட்ட சமயத்தில் வவுனியா மன்னார் பிரதான வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேரூந்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் பேரூந்தும் வானும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.