வவுனியா விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி!!

724

இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி..

வவுனியா விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் 2020ம் ஆண்டிற்காக வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு நிகழ்வுகள் பாடசாலையின் அதிபர் க.செல்வதேவன் தலைமையில் இன்று(02.03.2020) மதியம் சிறப்பாக இடம்பெற்றது.

திறனாய்வு விளையாட்டு நிகழ்வின் பிரதம விருந்தினராக ஒய்வு நிலை பொறியியலாளர் கு.சிவகுமாரன் கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா வடக்கு ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் சு.ஜெயச்சந்திரன் , வவுனியா வடக்கு உதவிக்கல்விப் பணிப்பாளர் கு.செந்தில்குமரன்,

வவுனியா வடக்கு ஆசிரிய ஆலோசகர் து.ரவிச்சந்திரன் உட்பட கௌரவ விருந்தினர்கள் , விஷேட அதிதிகள் மற்றும் அயல் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் , மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அஞ்சல் ஓட்டம் , விநோத உடைப்போட்டி , கயிறு இழுத்தல் , பெற்றோர் நிகழ்வுகள் , பழைய மாணவர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம்பெற்றன.

அத்துடன் தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கான கிண்ணங்களும் பரிசில்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டதுடன் பங்குபற்றிய மாணவர்கள் அனைவருக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.