வவுனியா பொலிசாரின் அதிரடி நடவடிக்கை : வா ள்களுடன் நடமாடியமை தொடர்பில் மேலும் மூவர் கைது!!

656

பொலிசாரின் அதிரடி நடவடிக்கை..

வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ள தீவிர வி சாரணைகளின் அடிப்படையில் பண்டாரிக்குளம் பகுதியில் வா ள்களுடன் நடமாடி வீடு ஒன்றின் மீது பெ ட்ரோல் கு ண்டு வீ சியமை மற்றும் ஆவா குழு என பொறித்தமை தொடர்பில் ச ந்தேகத்தில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைதானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது.

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் புதன்கிழமை மாலை ரோ ந்து நடவடிக்கையில் ஈடுபட்ட விசேட அ திரடிப் ப டையினர் வா ளுடன் நடந்து சென்ற 24 மற்றும் 26 வயதுடைய இரு இளைஞர்களை கைது செய்தனர். அவர்களை வவுனியா கு ற்றத் த டுப்பு பொலிசாரிடம் விசேட அ திரடிப் ப டையினர் ஒப்படைத்திருந்தனர்.

அவர்களிடம் பொலிசார் மேற்கொண்ட வி சாரணைகளையடுத்து பண்டாரிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முன் கடந்த 29 ஆம் திகதி இரவு 8 மணியளவில் பெ ற்றோல் கு ண்டு வீ ச்சு நடத்தப்பட்டு, வீட்டின் சுவரில் ஆவா குழு என பொறிக்கப்பட்டு வீட்டு கே ற்றும் வா ளால் கு த்தி சேதமாக்கப்பட்ட சம்பவத்திற்கும் கைது செய்யப்பட்டவர்களுக்கும் தொடர்பிருப்பதாக சந் தேகம் அடைந்த பொலிசார் அது தொடர்பான வி சாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அதிகாரி பிரனீத் மானாவடு தலைமையில் கு ற்றத் தடுப்பு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விரைந்து முன்னெடுத்துள்ள விசாரணைகளின் காரணமாக,

வாரிக்குட்டியூர், திருநாவற்குளம், குருமன்காடு ஆகிய பகுதிகளில் மேலும் மூவர் நேற்று காலை கைது செய்யப்பட்டனர். அத்துடன் மேலும் 9 பேரை பொலிசார் தே டிவந்தனர்.

இந்நிலையில் பொலிசாரால் தே டப்பட்டு வந்த இளைஞர்களில் மூவர் நேற்று மாலை வவுனியா நகரம் மற்றும் ஹொரவப்பொத்தானை வீதி ஆகிய பகுதிகளில் வைத்து கை து செய்யப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் இதுவரை 8 பேர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரு வா ள்களும் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 6 பேரை பொலிசார் தே டி வருகின்றனர்.